தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!
அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ,2015 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக திரு.அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
அதற்கமைய தான் ஜோதிடத்தை பெரிதும் நம்புவதாகவும், ராஜயோகம் தனது மையத்தில் இருப்பதாகவும் திரு.திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மேலும் ,இணைய அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.